கல்யாணம் காணல்நீராகி, கண்ணீர்சிந்தும் பெண்களின் நிலை.. சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே..!]
குர்ஆன் ஹதீஸ்படி வாழவேண்டிய நாம், பிற சமுதாயத்தைப் பின்பற்றி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பெற்றெடுத்த தாய் தந்தையருக்குதான் தெரியும்..
தம் மகளை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்.?
குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் தாய் தந்தைகள் எத்தனை பேர்?
உடன் பிறந்த சகோதரிகளை கரை ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்?
கல்யாணம் என்பதே காணல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னிப்பெண்கள் எத்தனை பேர்?
என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்க்கிறதா?
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே..!
வரதட்சணைக்குத் தகுந்த வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு, மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் மனநோயாளிகளாகிப் போகும் பெண்கள், இவையெல்லாம் நம் கண்ணெதிரே பார்க்கத்தான் செய்கிறோம்.
இருப்பினும் இதை சிந்திக்கிறோமா..?
இன்னும்,
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்(அல்குர்ஆன் 4:4)
என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமகனும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?
ஒரு லட்சம முதல் 5லட்சம் வரை மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டுஅதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணப்பெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் பிச்சைக்காரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள்.
மேலும், சிலர் பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்து வரதட்சணை தருகிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தைக் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கேட்டுப்பெரும் சில ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவற்றையும் நாம் சிந்தித்துப்பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் உறுதுணையாக ஆண்கள் இருந்தாலும், அதற்குப்பின்னால் முக்கிய காரணமாக பெற்றோர்களே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே,
சகோதரர்களே...!
அல்லாஹ் மற்றும் நபி கூறியபடி மஹ்ர் கொடுத்து மணமுடியுங்கள். உங்கள் வாழ்க்கையை அல்லாஹ் செழிப்பாக்கி வைப்பான்..
ஆமீன்.
Latest Jumuahs
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Wellampittiya, Sedhawatte, Ar Rahmath Jumua Masjidh
Ash Sheikh Muzzammil(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Anfas Mufthi(Deobandi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Shakeel(Islami)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Fayas(Furqani Kekirawa)
Kurunegala, Mallawapitiya Jumua Masjidh
Latest Special Bayans
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Your Comments